News September 5, 2025
விழுப்புரம்: மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் உள்ள சித்தலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான ராஜேந்திரன், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். நேற்று முன்தினம் திருப்பாச்சனூர் சவுக்குத் தோப்பில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திடீர் சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
Similar News
News September 20, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 20, 2025
உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று (19.09.2025) நடைபெற்றது. உடன் வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
News September 19, 2025
BREAKING: விழுப்புரம்: மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி பலி

செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த, திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொங்கராயநல்லூரை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகள் அண்ணன் ராமச்சந்திரன் – தம்பி சின்ராசு இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.