News April 10, 2024
நீலகிரியில் வாக்காளர் பட்டியலில் 10,000 பேர் மிஸ்ஸிங்

நீலகிரியில் 10,000 வாக்காளர்களை பட்டியலில் காணவில்லை. ஊட்டி சட்டபேரவை தொகுதி- 94,256, குன்னூர் சட்டபேரவை தொகுதி- 91,614, கூடலூர் சட்டபேரவை தொகுதி- 1,87,754 வாக்காளர்கள் இருந்தனர். இதில் ஊட்டியில் 6,500, குன்னூரில் 2,500, கூடலூரில் 1,000 பேர் என மொத்தம் 10,000 வாக்காளர்களை பட்டியலில் காணவில்லை. வேலைவாய்ப்பு இல்லாததால், கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அவர்கள் பெயர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Similar News
News March 11, 2026
BREAKING: மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலின், வைகோ முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 4-ல் வெற்றி பெற்றது.
News March 11, 2026
சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் தோல்வி

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. கடும் அமளியை அடுத்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, 18-வது லோக்சபாவில் காங்கிரஸ் MP-க்கள் இதுவரை 157 மணிநேரம் பேசியுள்ளனர். ஆனால், சபாநாயகர் பேசவிடாமல் பாரபட்சம் காட்டுவதாக காங்., குற்றஞ்சாட்டுவதாக அமித்ஷா தெரிவித்தார்.
News March 11, 2026
‘சிலிண்டர் தட்டுப்பாடு’ பயம் வேண்டாம்: PM மோடி

கொரோனா பேரிடர் நெருக்கடியை போல சிலிண்டர் தட்டுப்பாட்டில் இருந்து இந்தியா மீளும் என PM மோடி கூறியுள்ளார். மேற்கு ஆசிய போர் தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், போரினால் எரிவாயு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.


