News September 5, 2025
அரியலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அரியலூர் மாவட்டத்தில் செப்டம்பர் 9, 2025 அன்று செந்துறை ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பான மனுக்கள் ஏற்கப்படுகின்றன. செந்துறை ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபம் பொன்பரப்பி நடைபெறும். இம்முகாமில் அரசு அலுவலர்கள் நேரடியாக கலந்து கொண்டு மக்களின் கோரிக்கையைப் பதிவு செய்து விரைவான தீர்வுகளை வழங்க உள்ளனர்.
Similar News
News September 5, 2025
அரியலூர்: ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்துடன் கடன்

அரியலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கு 50 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 5000 ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு. பொ. ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News September 5, 2025
அரியலூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

அரியலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News September 5, 2025
அரியலூர் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

இன்று (செப்டம்பர் 5) வெள்ளிக்கிழமை மிலாடி நபி தினத்தையொட்டி, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் இன்று ஒரு நாள் முழுமையாக மூடப்படும் என்றும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவித்துள்ளார்.