News September 5, 2025

உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு: ஜெய்சங்கர்

image

ரஷ்யா – உக்ரைன் இடையேயான விரைவில் தீர்வு காணவும், நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கும் இந்தியா தனது ஆதரவை அளிப்பதாக EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை உக்ரைனின் நிதியமைச்சர் ஆண்ட்ரி சிபியா உடன் அவர் பேசியுள்ளதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்போது, இந்தியா – உக்ரைன் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் மோதல் குறித்து விவாதித்ததாகவும் கூறியுள்ளார். முற்றுபெறுமா போர்?

Similar News

News March 20, 2026

அதிமுக MP மீது விசாரணையை தொடங்கிய மகளிர் ஆணையம்

image

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய C.V.சண்முகம் மீது மாநில மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. ஊடங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் C.V.சண்முகம் MP என்பதால் நாடாளுமன்ற செயலரிடம் புகார் அளிக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க DGP-க்கு பரிந்துரைக்கவும் மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது.

News March 20, 2026

அடுத்த ரேஸில் களமிறங்கும் அஜித்!

image

க்ரெவெண்டிக் 24H சீரிஸ் ஐரோப்பிய தொடரில் இன்று அஜித் பங்கேற்க உள்ளார். Ajith RedAnt Racing என்ற பெயரில் களமிறங்கும் அவரது அணியில், அவருடன் இணைந்து கோபி டி பிரூக்கர், அய்ர்டன், யானிக் ஆகியோர் ரேஸில் கலக்க உள்ளனர். இந்த ரேஸில் அஜித் Mercedes-AMG GT3 EVO ரக காரைப் பயன்படுத்த உள்ளாராம். துபாய் தொடரில் கோப்பையை வெல்ல தவறியதால், இதில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் இருக்கிறாராம்.

News March 20, 2026

ஈரான் போருக்காக மேலும் ₹18 லட்சம் கோடியை இறைக்கும் US

image

ஈரானுடனான போரைத் தொடர்வதற்காக, பென்டகன் அமெரிக்க காங்கிரஸிடம் 200 பில்லியன் டாலர் (₹18 லட்சம் கோடி) கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஈரானியப் பொருளாதாரத்தின் (356 பில்லியன் டாலர்) பாதிக்கும் மேலாகும். போரின் முதல் வாரத்திலேயே அமெரிக்கா 11 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்டது. போருக்காக அமெரிக்கா அதிகப்படியாக செலவிடுவதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!