News September 5, 2025

உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு: ஜெய்சங்கர்

image

ரஷ்யா – உக்ரைன் இடையேயான விரைவில் தீர்வு காணவும், நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கும் இந்தியா தனது ஆதரவை அளிப்பதாக EAM ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை உக்ரைனின் நிதியமைச்சர் ஆண்ட்ரி சிபியா உடன் அவர் பேசியுள்ளதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்போது, இந்தியா – உக்ரைன் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் மோதல் குறித்து விவாதித்ததாகவும் கூறியுள்ளார். முற்றுபெறுமா போர்?

Similar News

News September 8, 2025

கட்சியிலிருந்து நீக்கம்; மல்லை சத்யா ரியாக்‌ஷன்

image

மதிமுகவில் இருந்து தன்னை நீக்கி ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ என மல்லை சத்யா சாடியுள்ளார். தன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என கூறிய அவர், இதுபற்றி தான் கவலைப்படவில்லை; வைகோதான் கவலைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வைகோ தனது மகன் பற்றி மட்டுமே சிந்திப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News September 8, 2025

கடைசி வரிசையில் PM மோடி.. பாஜக சொல்லும் மெசேஜ்!

image

டெல்லியில், BJP MP-க்களுடனான ஆலோசனை கூட்டத்தில் PM மோடி கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்ததை அக்கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர். GST மறுசீரமைப்பு விளக்கம், கட்சி வளர்ச்சி குறித்த இந்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில், பிரதமராக இருந்தும் கூட மோடி கடைசி வரிசையில் அமர்ந்து தான் ஒரு சாதாரண தொண்டன் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தியதாக பாஜகவினர் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News September 8, 2025

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்

image

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா, நிரந்தரமாக நீக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கடந்த மாதம் தற்காலிகமாக நீக்கப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இன்று நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். மதிமுகவில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த மல்லை சத்யா, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!