News September 5, 2025
ஆப்கனில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழுகுரல்களுக்கு இடையே மீட்புப் பணிகள் நடந்துவரும் நிலையில், 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.2 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது டெல்லி, ஜம்மு & காஷ்மீர் வரை உணரப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Similar News
News March 24, 2026
PM மோடி – டிரம்ப் முக்கிய ஆலோசனை

மேற்காசியாவில் நிலவும் போர்ச்சூழல் பற்றி அதிபர் டிரம்ப், PM மோடி உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு ஹார்முஸ் நீரிணை திறந்து இருப்பதன் முக்கியத்துவம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மேற்காசியாவில் அமைதி நிலவுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும் என டிரம்ப்பிடம் உறுதியளித்தாக X-ல் PM மோடி பதிவிட்டுள்ளார்.
News March 24, 2026
வங்கிக் கணக்கில் பணம்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

EPFO-வில் உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமார் ₹5,200 கோடி நிதியை சம்பந்தப்பட்டோரின் வங்கிக் கணக்கில் தானாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 55 வயதை கடந்த ஓய்வு பெற்றவர்களின் EPFO கணக்குகள் 3 ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல் இருந்தால் அவை செயலற்ற கணக்குகளாக கருதப்படும்.
News March 24, 2026
அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி இல்லை: EPS

தமாகா, IJK, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு நாளை இறுதிசெய்யப்படும் என EPS கூறியுள்ளார். கூட்டணிக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வருவாரா என்ற கேள்விக்கு, பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், அதனால் அவர் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை எனவும் EPS திட்டவட்டமாக தெரிவித்தார். இன்னும், சில நாள்களில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.


