News April 10, 2024
தென் கொரியாவில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு

தென் கொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 14,259 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 3 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 254 வேட்பாளர்கள் நேரடி வாக்குப்பதிவு மூலமும், 46 உறுப்பினர்கள் கட்சி ஆதரவுடனும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் ஆளும் மக்கள் சக்தி கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இருமுனைப் போட்டியில் உள்ளன.
Similar News
News August 12, 2025
பிரியங்கா காந்தியை காணவில்லை.. பரபரப்பு புகார்

வயநாடு காவல்துறையில் MP பிரியங்கா காந்தியை காணவில்லை என பாஜக நிர்வாகி முகுந்தன் பல்லியரா மனு அளித்துள்ளார். பிரியங்கா காந்தியை 3 மாதங்களாக காணவில்லை எனவும், சூரல்மலையில் ஏற்பட்ட பாதிப்பின் போது மக்களோடு இருக்கவில்லை எனவும் புகாரளித்துள்ளார். முன்னதாக, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி கடந்த 2 மாதங்களாக தொகுதியில் காணவில்லை என திருச்சூர் போலீஸிடம் மாணவர் காங்கிரஸ் புகாரளித்திருந்தது.
News August 12, 2025
இப்படி செய்வது தொழில் தர்மமா.. நீங்க சொல்லுங்க!

HR ஒருவரின் போஸ்ட் நெட்டிசன்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த பதிவில், தங்கள் ஆபிஸில் வேலை செய்யும் Employee ஒருவர், தனது முதல் சம்பளம் வந்த 5 நிமிடங்களிலேயே வேலையை ராஜினாமா செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஒருவரை பல கட்ட Interview-களுக்கு பிறகு, தேர்வு செய்து வேலை கொடுத்தால், இப்படி செய்வது தொழில் தர்மமா? எனவும் அவர் கேட்கிறார். நீங்க என்ன நினைக்கிறீங்க.. கமெண்ட் பண்ணுங்க?
News August 12, 2025
ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி

முருகன் வரலாறு என்ற பெயரில் ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது அவர் எப்போது முருகராக மாறினார் என்ற கேள்வி எழுவதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம், முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ₹2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.