News September 5, 2025

விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் கைது

image

விழுப்புரத்தில் பாஜக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே அனுமதி பெற்றதாகக் கூறிய பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 32 பாஜகவினரை போலீசார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.

Similar News

News September 20, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 20, 2025

உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று (19.09.2025) நடைபெற்றது. உடன் வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

News September 19, 2025

BREAKING: விழுப்புரம்: மின்சாரம் தாக்கி அண்ணன்-தம்பி பலி

image

செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த, திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள  கொங்கராயநல்லூரை சேர்ந்த கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகள்  அண்ணன் ராமச்சந்திரன் – தம்பி சின்ராசு  இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!