News September 4, 2025
விழுப்புரம்: இருசக்கர வாகனத்தில் மது கடத்தியவர் கைது

புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு, இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில், விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 90 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News September 11, 2025
விழுப்புரம்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. உஷாராக இருங்கள். ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News September 11, 2025
விழுப்புரம்: இன்று இங்கெல்லாம் மின் தடை

விழுப்புரம் மாவட்டத்தில், பராமரிப்புப் பணிகள் காரணமாக, இன்று (செப்.11) காலை 9 – மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்நிறுத்தம் நடைபெற உள்ள பகுதிகள்:
▶️ கண்டமங்கலம்
▶️ வழுதாவூர்
▶️ பி.எஸ்.பாளையம்
▶️ நவமால்காப்பேரி
▶️ கலிங்கமலை
▶️ வெள்ளாழங்குப்பம்
▶️ கோண்டூர்
▶️ ஆழியூர்
▶️ பெரிய பாபுசமுத்திரம்
▶️ தாண்டவமூர்த்திகுப்பம்
▶️ பூசாரிப்பாளையம்
▶️ வி.பூதூர்
News September 11, 2025
விழுப்புரம்: நொடியில் நேர்ந்த சோகம்

விழுப்புரம் கோலியனூரான் வாய்க்கால் தெருவைச் சோ்ந்தவா் ராதா(40). விழுப்புரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். இவா் நேற்று காலை பள்ளிக்கு பணிக்கு சென்றபோது வழியில் மயங்கி கீழே விழுந்தார். பொதுமக்கள் மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.