News September 4, 2025

கரூர்: 25 தண்டாளுகளுக்கு மேல் எடுத்தவர்களுக்கு பரிசு

image

கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவலர் தினம் வருகின்ற (செப்டம்பர் 6) கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் அனைத்து காவலர்களும் பங்கேற்குமாறு மாவட்ட கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா கூறியுள்ளார். மேலும் குறைந்தபட்சம் 25 தண்டாலுகளுக்கு மேல் எடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் தொடர்புக்கு (AR DSP) 9944443392 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

Similar News

News September 5, 2025

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த முன்னாள் அமைச்சர்

image

ரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “வாழ்வின் வழிகாட்டிகள், நம் திறமையின் திசைகாட்டிகளான ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

News September 5, 2025

கரூர்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

கரூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <>AAVOT.COM <<>>என்ற இணையதளம் செல்லுங்கள்.அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து,நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம்.(அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். பட்டா விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். SHARE பண்ணுங்க

News September 5, 2025

மிலாடி நபி வாழ்த்துக்கள் தெரிவித்த முன்னாள் அமைச்சர்!

image

கரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,”இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்” என்ற வாசகங்களை மேற்கோள் காட்டி இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!