News September 4, 2025

ஈரோடு சுகாதார துறை படிப்புக்கு வாய்ப்பு

image

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் ஈ.சி.ஜி, அவசரப் பிரிவு, சுவாச சிகிச்சை, டயாலிசிஸ், மயக்கவியல் துறை, அறுவை அரங்கு டெக்னீசியன், எலும்பு முறிவுத்துறை போன்ற படிப்புகளுக்கு 146 இடங்கள் காலியாக உள்ளது. இதில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை ஈரோடு மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News September 7, 2025

ஈரோடு மாவட்ட போலீசார் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 600 காவலர்கள், தீயணைப்பு பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.21ஆம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும். இந்தத் தேர்வு குறித்த சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், ஈரோடு மாவட்டக் காவல்துறை ஒரு உதவி மையத்தைத் தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு 96552 20100 அழைக்கவும்.(SHARE பண்ணுங்க)

News September 6, 2025

ஈரோடு: மின் துறையில் SUPERVISOR வேலை!

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக் <<>>செய்து இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். ஈரோடு மக்களே யாருக்காவது பயன்பாடும் அதிகம் SHARE பண்ணுங்க.!

News September 6, 2025

ஈரோடு 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நாளை நேர்காணல்!

image

ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டிபி ஹாலில் நாளை (செப்., 7) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு 73388-94971, 73977-24813, 91500-84186 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!