News September 4, 2025
திமுக அரசில் ஜல்லிக்கட்டு டோக்கன்களிலும் ஊழல்: EPS

2026-ல் ADMK ஆட்சி அமைந்தவுடன், பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என சேந்தமங்கலம் தேர்தல் பரப்புரையில் EPS தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டி டோக்கன்களிலும் ஊழல் செய்த திமுக அரசு அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு புதிய வடிவில் பெயர் சூட்டி வருவதாக சாடினார். மேலும், டாஸ்மாக்கில் ₹1,000 கோடி ஊழலை ED கண்டுபிடித்துள்ளதாகவும் விரைவில் பலர் கைதாக உள்ளனர் என ஆருடம் தெரிவித்தார்.
Similar News
News September 7, 2025
ஞானத்தை அள்ளித் தரும் விநாயகர் காயத்ரி மந்திரம்!

ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி பிரச்சோதயா
பொருள்
வளைந்த யானைத் தும்பிக்கையைக் கொண்டவரே நான் பணிவுடன் உயர்ந்த புத்தியை நாடுகிறேன். என் வாழ்க்கையை ஞானத்தால் ஒளிரச் செய்ய மகிமை மிக்கவரை வணங்குகிறேன். எங்கும் நிறைந்த, ஒற்றைத் தந்தத்தையுடைய தெய்வீகப் பெருமானை நான் வணங்குகிறேன். SHARE IT.
News September 7, 2025
இந்திய கிரிக்கெட் அணியின் ஒரே கேம் சேஞ்சர் இவர்தான்

இந்திய அணியில் விராட், ரோஹித் இல்லாதது மிகப்பெரிய இழப்புதான் என்று இங்கி., முன்னாள் வீரர் ரோலண்ட் புட்சர் கூறியுள்ளார். இவர்கள் இருவர் இல்லாதபோது, கில் தலைமையிலான இளம்படை இங்கி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை சமனில் முடித்ததையும் அவர் பாராட்டினார். அதேநேரம், தற்போதைய இந்திய அணியில் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரே வீரர் ரிஷப் பண்ட் மட்டுமே என்றும் அவர் புகழாராம் சூட்டியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News September 7, 2025
எனக்கு என்னமோ திருப்திப்படல: அண்ணாமலை

கடந்த சில நாள்களாக கூட்டணியில் (NDA) நடக்கும் நிகழ்வுகள் திருப்தியாக இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார். TTV தினகரன் விலகல், செங்கோட்டையனின் பொறுப்பு பறிப்பால் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் ஆகியவை NDA கூட்டணிக்கு புதிய நெருக்கடியாக அமைந்துள்ளது. எனவே, புதிதாக ஒரு கட்சியை அழைப்பதை விட, இருப்பதை வைத்து கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி என்பதையே பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.