News September 4, 2025

அனைத்து ரேஷன் கார்டுக்கும் ₹5,000.. வெளியான புது தகவல்

image

2026 பொங்கல் பண்டிகை சிறப்புத் தொகுப்புடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5,000 ரொக்கம் வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது CM ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News September 5, 2025

ஐரோப்பிய தலைவர்களை இந்தியாவிற்கு அழைத்த PM

image

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயெனுடன் PM மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டதை தலைவர்கள் வரவேற்றனர். உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்த கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். மேலும், அந்த 2 ஐரோப்பிய தலைவர்களை இந்தியாவிற்கு வருமாறு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

News September 5, 2025

மாதம் ₹12,400 உதவித்தொகை.. உடனே அப்ளை பண்ணுங்க

image

2025-26 கல்வியாண்டில் ME, MTech, M.Design படிப்புகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை AICTE வெளியிட்டுள்ளது. மாணவர்களின் GATE/CEED ஸ்கோர் அடிப்படையில் மாதந்தோறும் ₹12,400 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் பயிலும் நிறுவனங்களில் ID பெற்று, டிசம்.15க்குள் <>https://www.aicte.gov.in/<<>> தளத்தில் இந்த ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.

News September 5, 2025

வடகொரியா தோன்றியது முதல் ஆளும் ஒரே குடும்பம்!

image

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவில் நேற்று நடந்த வெற்றி தின அணிவகுப்பில் தனது மகள் கிம் ஜூ-ஏ உடன் கலந்து கொண்டார். இதன்மூலம், வடகொரியாவின் வருங்கால அதிபர் கிம் ஜூ – ஏ தான் என பரவலாக பேசப்படுகிறது. இப்படி பேசப்படுவதற்கு முக்கிய காரணமும் உள்ளது. வடகொரியா என்ற நாடு தோன்றியது முதல் கிம் குடும்பம் தான் தொடர்ச்சியாக அந்நாட்டை ஆண்டு வருகிறது. அதன் வரலாற்றை மேலே Swipe செய்து அறிந்து கொள்ளுங்கள்.

error: Content is protected !!