News September 4, 2025
தி.மலை: சொந்த தொழில் தொடங்க ரூ. 3 லட்சம் மானியம்!

தி.மலை மக்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க தி.மலை மாவட்ட பிற்படுத்தபிற்பட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News September 7, 2025
தி.மலை: இந்த APP உங்க போன்ல இருக்கா?

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். <
News September 7, 2025
தி.மலை: இந்த APP உங்க போன்ல இருக்கா?

மேலும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து இந்த காவலன் SOS செயலியில் உள்ள SOSஐ கிளிக் செய்தால், மொபைலின் கேமரா தானாக திறந்து உங்களின் இருப்பிடத்தை புகைப்படம்/ வீடியோ எடுத்து கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்பும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் (04175-233431). ஷேர் பண்ணுங்க
News September 7, 2025
தி.மலை: டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தி.மலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் செப்.5 தேதி இரவு மது வாங்க வந்தவருக்கும், ஊழியர்களுக்கும் இடையே சில்லறை தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த இளைஞர் மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பற்ற வைத்து கடைமீது வீசினார். இதனால் அங்கு தீப்பற்றி எரிந்த நிலையில், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இது தொடர்பாக போலீசார் பிரதீப் என்பவரை கைது செய்தனர்.