News April 10, 2024
பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலையூர், காவிரிப்பூம்பட்டினம், வானகிரி உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் மயிலாடுதுறை மாவட்ட காவல் தேர்தல் பார்வைையாளர் ஜன்மே ஜெயாகைலாஷ், மாவட்ட எஸ்பி மீனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
Similar News
News March 14, 2026
மயிலாடுதுறை: முக்கிய ரயில் நேரம் மாற்றம்

சென்னையிலிருந்து காலை 8:00 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் சோழன் அதிவிரைவு ரயில், ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக காலதாமதமாக புறப்படும். வருகிற மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை சென்னை எக்மோரில் இருந்து காலை 8 மணிக்கு பதிலாக 10.15 மணிக்கு தாமதமாக புறப்பட்டு அனைத்து சந்திப்புகளுக்கும் 2.15 மணி நேரம் காலதாமதமாக வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News March 14, 2026
மயிலாடுதுறை: கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மாப்படுகையை சேர்ந்த குகன் என்பவரை கடந்த 8-ம் தேதி போலீசார் கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். குகன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் ஆட்சியர் உத்தரவின்பேரில் போலீசார் குகனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
News March 14, 2026
மயிலாடுதுறை: கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மாப்படுகையை சேர்ந்த குகன் என்பவரை கடந்த 8-ம் தேதி போலீசார் கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். குகன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் ஆட்சியர் உத்தரவின்பேரில் போலீசார் குகனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


