News September 4, 2025
கடலூர்: தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

கடலூர் கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி ஞான சௌந்தரி. இவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் குணஸ்ரீ (1) என்ற குழந்தை இன்று (செப்.4) காலை தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டிலிருந்த தண்ணீர் வாளியில் குழந்தை குணஸ்ரீ தவறி விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 8, 2026
கடலூர்: PHONE-ல் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 8, 2026
கடலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சித்தேரியில் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருண்மொழிதேவன் முன்னிலையில், நேற்று (மார்ச் 7) மாற்றுக்கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில், அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க!
News March 8, 2026
கடலூர்: பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1 ஊக்கத்தொகை

கடலூர் மாவட்டத்தில் 264 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 50,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் 3 மாத காலத்திற்கு மட்டும் லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE


