News September 4, 2025

சீனாவை தொடர்ந்து சிங்கப்பூருடன் அதிக நெருக்கம்!

image

டெல்லியில் சிங்கப்பூர் PM லாரன்ஸ் வாங் உடன் PM மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பேசிய PM மோடி, பஹல்காம் தாக்குதல் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததற்கு சிங்கப்பூர் அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், வர்த்தகம், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சிகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளதாகவும் கூறினார்.

Similar News

News September 4, 2025

BREAKING: தீபாவளி பரிசு அறிவித்த பிரதமர் மோடி

image

தீபாவளி, சாத் பண்டிகைக்கு இரட்டை பரிசை மத்திய அரசு அறிவித்துள்ளதாக PM மோடி கூறியுள்ளார். டெல்லியில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு <<17608536>>GST சீர்திருத்தம்<<>> உதவிகரமாக இருக்கும் என்றார். மேலும், GST-க்கு முன்பு காங்., ஆட்சியில் மருந்துகள், காப்பீடு, சமையல் பொருள்களுக்கு ஏராளமான வரி விதிக்கப்பட்டதாக கடுமையாக சாடியுள்ளார். உங்கள் கருத்து?

News September 4, 2025

20-வது இடத்தில் அண்ணா பல்கலை.,

image

நாட்டின் சிறந்த பொறியியல் பல்கலை.,யான அண்ணா பல்கலை.,க்கு இது இறங்குமுகம். ஆம், தரவரிசையில் 2023-ல் 13-வது இடத்தில் இருந்த இது, 2025-ல் 20-வது இடத்துக்கும், Overall பிரிவில் 29-வது இடத்துக்கும் சரிந்துள்ளது. இந்த பல்கலை., வளாகத்தில் நடந்த ஒரு பாலியல் குற்றத்தால், பெயர் கெட்டுவிடக் கூடாது என மின்னல் வேக நடவடிக்கை எடுத்த அரசு, இதையும் அதே வேகத்தில் சரிசெய்யுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News September 4, 2025

ரேப் கேஸில் இருந்து பாக்., வீரர் விடுதலை

image

பாக்., கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை பிரிட்டன் போலீசார் முடித்து வைத்தனர். போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவரை விடுதலை செய்தனர். பிரிட்டன் வாழ் பாக்., வம்சாவளி பெண் அளித்த புகாரில், ஹைதர் அலி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஆனால், குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என கூறி விசாரணைக்கு அலி முழு ஒத்துழைப்பை வழங்கிய நிலையில், PCB-யும் அவருக்கு சட்ட உதவிகளை வழங்கியது.

error: Content is protected !!