News September 4, 2025

திருவாரூர் மாவட்டத்தில் என்.எஸ்.எஸ் கொடி அறிமுகம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நாட்டுநலப்பணித்திட்டத்தின் கொடியினை முதன்மைக் கல்வி அலுவலர் செளந்தரராசன் அறிமுகம் செய்து வைத்து என்.எஸ்.எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்கரபாணியிடம் வழங்கினார். அதன் படி அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் பள்ளி வளாகத்தில் என்.எஸ்.எஸ் கொடியை ஏற்றி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

திருவாரூர்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 8, 2025

திருவாரூர்: காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

image

பொது இடங்களில் மது அருந்துபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்து, கீழ்க்கண்ட காவல் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் 9498110861, நன்னிலம் 9498143926, மன்னார்குடி 9498183264, திருத்துறைப்பூண்டி 9445407674, முத்துப்பேட்டை 9840717894, தனிப்பிரிவு அலுவலகம் 04366 225925 & 9498100865, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு 830058812.

News December 8, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (டிச.7) இரவு 10 மணி முதல் இன்று (டிச.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!