News September 4, 2025

சேலத்தில் தெரு நாய் கடித்து வாலிபர் பலி ?

image

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்த ஹரி விக்னேஷ் (23) என்பவர் காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவரை தெரு நாய் ஒன்று கடித்ததாகவும் அதனால் அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல்.கடந்த சில நாள்களுக்கு முன் ரோபிஸ் தாக்கி சேலத்தில் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Similar News

News September 8, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் மாவட்டத்தில் இன்று (07.09.2025) மறுநாள் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 7, 2025

சேலம் மாநகர காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

சேலம் மாநகர காவல் இன்று 7-9-25 ஞாயிறு, இரவு ரோந்து அதிகாரிகள் விவரம், சேலம் டவுன் ஆய்வாளர் தேவராஜன், அன்னதானப்பட்டி ஆய்வாளர் பழனி, கொண்டலாம்பட்டி ஆய்வாளர் மோகனா, அம்மாபேட்டை ஆய்வாளர் விஜேந்திரன், அஸ்தம்பட்டி ஆய்வாளர் யுவராஜ், சூரமங்கலம் ஆய்வாளர் மனோன்மணி, மேலும் புகார் தொடர்பான உதவிக்கு 9486094666 என்ற எண்ணை அழைக்கலாம் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 7, 2025

சேலம்: நோய் தீர்க்கும் அற்புத கோயில்!

image

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையை சுற்றியும், பாதிக்கப்பட்ட தோல் பகுதியையும் சுற்றி, இந்த காந்த குளத்தில் போட்டால், தோல் வியாதி குணமாகும் என்பது ஐதீகம். தோல் வியாதிகளால் அவதிப்படுவோருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!