News September 4, 2025
அலர்ட்: வெளுத்து வாங்கபோகும் கனமழை

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக, பரவலாக மழை பெய்து வரும் நிலையில், IMD மீண்டும் கனமழை அலர்ட் விடுத்துள்ளது. வரும் 8-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், 9-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையிலும் மழை பெய்யக்கூடும் எனவும் அலர்ட் கொடுத்துள்ளது.
Similar News
News September 7, 2025
உலகக்கோப்பை: மாஸ் என்ட்ரி கொடுத்த மொராக்கோ

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு, முதல் ஆப்பிரிக்க நாட்டு அணியாக மொராக்கோ கால்பந்து அணி தேர்வாகியுள்ளது. நைஜருக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் 5-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் தொடருக்குள் நுழைந்துள்ளது. PSG நட்சத்திர வீரர் ஹகிமி இடம்பெற்றுள்ள இந்த அணியானது, 29, 38, 51, 69, 84-வது நிமிடங்களில் கோல் அடித்து வெற்றியை தன்வசப்படுத்தியது.
News September 7, 2025
₹150 கோடி வசூலை தாண்டிய லோகா

கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படம் மொழிகளைக் கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ₹150 கோடி வசூலைத் தாண்டி, மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபிஸில் புது சாதனையை படைத்துள்ளது. இதற்கு படத்தின் திரைக்கதை மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருப்பதே காரணம். இதனால் நாளுக்கு நாள் தியேட்டர்களை நோக்கிச் செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
News September 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 451 ▶குறள்: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். ▶ பொருள்: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.