News September 4, 2025

கடலூர்: தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

image

கடலூர் கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி ஞான சௌந்தரி. இவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் குணஸ்ரீ (1) என்ற குழந்தை இன்று (செப்.4) காலை தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீட்டிலிருந்த தண்ணீர் வாளியில் குழந்தை குணஸ்ரீ தவறி விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News September 7, 2025

கடலூர்: பெல் நிறுவனத்தில் சூப்பர் வேலை!

image

கடலூர் மக்களே, திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து செப்.,15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 7, 2025

பண்ருட்டி: ஆசிரியர்களை சந்தித்து உரையாடிய எம்எல்ஏ

image

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, குவைத் நாட்டில் நந்தவனம் அமைப்பு சார்பில் நடத்தப்படும் தமிழ் வகுப்பில் பயிலும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்தார். கடல் கடந்து தமிழ் வளர்க்கும் அவர்களின் தமிழ் தொண்டினைப் பாராட்டியதோடு, அவர்களின் முயற்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சிஎன்றும் துணை நிற்கும் என உறுதியளித்தார்.

News September 7, 2025

மருத்துவமனைக்கு சென்று MLA ஆறுதல்

image

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் திருநெல்வேலியில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக பேருந்தில் பயணம் செய்தபோது அதிகாலையில் விபத்து ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், விருத்தாசலம் எம்எல்ஏ இராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆறுதல் கூறி தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

error: Content is protected !!