News September 4, 2025

பெரம்பலூர்: டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

image

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் பெரம்பலூர் ஆட்சியர் ந.மிருனாளினி அறிவித்துள்ளார்.

Similar News

News September 4, 2025

பெரம்பலூர்: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

image

பெரம்பலூர் மக்களே சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். இனி <>https://tnurbanepay.tn.gov.in/ <<>>இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் சேவைகளையும் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 4, 2025

பெரம்பலூர்: POLICE ஆக ஆசையா?

image

பெரம்பலூர் மக்களே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து வரும் செப்.21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News September 4, 2025

பெரம்பலூரில் பயங்கர தீ விபத்து

image

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் ஆயில் மில்லில் இன்று (செப்.04) காலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதாரமானது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் மற்றும் மின்சாரத் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தீவிபத்தால், அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!