News September 4, 2025
தஞ்சையில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, தஞ்சையில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. திருச்சியில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் தஞ்சை மாவட்ட ஆட்சியரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
தஞ்சை மாவட்டத்தில் 21 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

தஞ்சை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலையொட்டி 21 தாசில்தார்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் துணை தாசில்தார்கள், சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வரும் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு பணியிடமாற்றம், பதவி உயர்வுடன் பணியிட மாற்றமும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பிறப்பித்துள்ளார்.
News March 8, 2026
தஞ்சை: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 8, 2026
தஞ்சை: பாஜக மையக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக மையக்குழு, ஒன்றிய தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொகுதி களப்பணிகளை ஒருங்கிணைக்கவும் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பாளர் இளங்கோ, பொறுப்பாளர் துரை, பொதுச்செயலாளர் வீரசிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசித்தனர்.


