News September 4, 2025

BREAKING: இபிஎஸ் வழக்கில் தீர்ப்பு வெளியானது

image

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை நிராகரித்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2022 ஜூலையில் இபிஎஸ் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து சூர்யமூர்த்தி என்பவர் தொடுத்த வழக்கை நிராகரிக்கக்கோரி, இபிஎஸ் தொடர்ந்த வழக்கை உரிமையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்த நிலையில், அவருக்கு சாதகமாக ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News March 10, 2026

ஈரான் புதிய உயர் தலைவர் மீது டிரம்ப் அதிருப்தி!

image

மறைந்த அயதுல்லா கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உயர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மொஜ்தபா கமேனியை தேர்ந்தெடுத்து, ஈரான் மிகப்பெரிய தவறு செய்துள்ளதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். அடுத்த கமேனியை கொல்வதை விட, தான் ஈரானின் அடுத்த உயர் தலைவரை தேர்ந்தெடுக்கவே விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

மார்ச் 10: வரலாற்றில் இன்று

image

*1922 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு பம்பாயில் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். *1948 – இந்தியாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மதராஸில் தொடங்கப்பட்டது. *1933 – பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த தினம். *1980 – திரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி பிறந்த தினம். *1897 – இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் புலே நினைவு தினம்.

News March 10, 2026

இலங்கை அணியின் கோச் ஆனார் கேரி கிர்ஸ்டன்

image

டி20 WC தொடரில் இலங்கை அணியின் படுதோல்வியை அடுத்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகினார். இதையடுத்து அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு 2011 இல் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேரி கிர்ஸ்டன், 2 ஆண்டுகாலத்திற்கு வரும் ஏப்ரல் 14, 2028 வரை தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

error: Content is protected !!