News April 10, 2024

10 ஆண்டுகளில் 75,000 ஆக உயர்ந்த சென்செக்ஸ்

image

38 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 அடிப்படை புள்ளிகளை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து படிப்படியாக உயர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, 20,000ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்து, நேற்று வர்த்தக நேரத்தில் 75,000 புள்ளிகளை கடந்து 75,124ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 50,000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

Similar News

News August 13, 2025

விஜயகாந்த் Photoவை விஜய் பயன்படுத்தலாம்.. பிரேமலதா

image

தேமுதிகவை தவிர யாரும் விஜயகாந்த் Photo-வை பயன்படுத்தக்கூடாது; கூட்டணி கட்சிகள் மட்டுமே தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரேமலதா சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், மானசீக குரு விஜயகாந்த் என தெரிவித்தால், போட்டோவை விஜய் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரேமலதா நேரடியாக அனுமதி அளித்துள்ளார். அவரின் இந்த திடீர் மனம் மாற்றத்திற்கு கூட்டணி கணக்குதான் காரணம் என சொல்லப்படுகிறது.

News August 13, 2025

மேடையில் பேசுவோமா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்

image

அதிமுக – திமுக சாதனைகள் குறித்து மேடை போட்டு பேசுவோமோ என CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால் விடுத்துள்ளார். பர்கூரில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம், மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் என ஏழைகளுக்காக வழங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளதாக கூறினார். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த இந்த அரசுக்கு தெரியவில்லை எனவும் விமர்சித்தார்.

News August 13, 2025

விஜய் போட்டியிடும் தொகுதி? விஜயகாந்த் வழியில் விஜய்?

image

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு உள்ளது. மதுரையில் அவர் போட்டியிட இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அவர் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயகாந்த் தன்னுடைய ஆரம்ப கால தேர்தல் வெற்றியை இப்பகுதியிலிருந்து பெற்றார். இளைஞர்கள் அதிகளவில் இருப்பதாலேயே இந்த மாவட்டத்தை விஜய் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!