News April 10, 2024
10 ஆண்டுகளில் 75,000 ஆக உயர்ந்த சென்செக்ஸ்

38 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 அடிப்படை புள்ளிகளை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து படிப்படியாக உயர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, 20,000ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்து, நேற்று வர்த்தக நேரத்தில் 75,000 புள்ளிகளை கடந்து 75,124ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 50,000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
Similar News
News March 25, 2026
BREAKING: பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு

NDA கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அன்புமணி வெளியிட்டுள்ளார். கீழ்வேளூர் – வடிவேல் ராவணன், அம்பத்தூர் – KN சேகர், செஞ்சி – கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர வேட்பாளர்கள் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 25, 2026
பாமகவுடன் மோதுகிறாரா விஜய்?

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக கூறப்படுவதால், அத்தொகுதியை சுற்றியே விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில், அத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக நேரடியாக களமிறங்குகிறது. பெரம்பூரில் திமுக வலுவாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், அதிமுக+பாமவுக்கும் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. ஒருவேளை விஜய்யும் களமிறங்கினால், வாக்குகள் பிரிந்து கடும் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News March 25, 2026
வேல்முருகன் துணையாக இருக்க வேண்டும்: அதிமுக

திமுக கூட்டணிக்கு எதிராக இத்தேர்தலை வேல்முருகன் சந்திக்க வேண்டும் என அதிமுக கொள்கைபரப்பு துணை செயலாளர் தமிழரசு அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகிய வேல்முருகன், அதிமுக ஆட்சி அமைவதற்கு துணையாக இருக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார். திமுக அமைச்சர்கள் செய்த முறைகேடுகளுக்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறி <<19449630>>ஏற்கெனவே வேல்முருகன்<<>> பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் <<-se>>#TNElection2026<<>>


