News September 4, 2025
மருத்துவ கல்லூரியில் சான்றிதழ் பாடங்களில் 178 காலியிடங்கள்

குமரி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில். கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கான எமர்ஜென்சி கேர் டெக்னீசியன், அனஸ்தீசியா தியேட்டர் ஆர்த்தோபெடிக் டெக்னிசியன்கள் உட்பட 178 காலியிடங்கள் உள்ளன. இந்த விபரங்கள் கல்லூரி அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வழங்கலாம் என கூறியுள்ளார்.
Similar News
News September 6, 2025
குமரி: முக்கிய கோவிலில் நேர மாற்றம்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் வழக்கம் போல் நாளை (செப்.7) மாலையில் 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். வழக்காக ஆதிகேசவப்பெருமாள் சன்னதியில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் தீபாராதனை சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என்றும், தொடர்ந்து கிருஷ்ணன், அய்யப்பசாமி சன்னதிகளில் தீபாராதனை நடக்கும். பின்னர் மாலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News September 6, 2025
குமரி: கடலில் பகுதியில் சடலம் மீட்பு

ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் இன்று ஒருவரது உடல் கடலில் இறந்த நிலையில் மிதப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் கடலோர காவல் குழும போலீசார் படகில் சென்று உடலை மீட்டனர். இறந்து போன அந்த நபர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரி பள்ளத்திற்கு கடலோர காவல் குழும போலீசார் இன்று அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
News September 6, 2025
மருத்துவக் கல்லூரி இயக்குனர் நியமனம்

நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடியை சேர்ந்தவர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி. இவர் கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வராக ஏற்கனவே பணியாற்றியுள்ளார். தற்போது இவர் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தோல் மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் பல்கலைக்கழக அளவில் 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.