News September 4, 2025
பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூர் பொது மேலாளர் பி. பால சந்திரசேனா இந்தப் புதிய முயற்சியின் மூலம் பி.எஸ்.என்.எல். பயனர்கள் இனிமேல் சிம் கார்டு இல்லாமல் இணைப்பு பெற முடியும். இதன் தொடக்க கால சலுகையாக இ-சிம் விலை ரூ.1 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை (செப் 15) வரை மட்டுமே என தெரிவித்தார்.
Similar News
News April 11, 2026
தஞ்சாவூர்: ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட 1250 டன் அரிசி

தஞ்சாவூர் மாவட்ட பொது விநியோகத் திட்டத்திற்காக, 1,250 டன் அரிசி சரக்கு ரயில் மூலம் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட சேமிப்புக் கிடங்குகளில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகள், தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து 21 வேகன்களில் ஏற்றப்பட்டு தேனிக்கு அனுப்பப்பட்டன.
News April 11, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் திருடிய காவலர் சஸ்பண்ட்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் காவல் நிலையத்தில், 2020-ல் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்க முயன்றபோது 300 பாட்டில்கள் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் நடத்திய விசாரணையில், காவல் நிலைய எழுத்தர் ஜெயகுரு (45) வெளிச்சந்தையில் மது பாட்டில்களை விற்றது உறுதியானதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் (சஸ்பண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
News April 11, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் திருடிய காவலர் சஸ்பண்ட்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் காவல் நிலையத்தில், 2020-ல் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்க முயன்றபோது 300 பாட்டில்கள் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் நடத்திய விசாரணையில், காவல் நிலைய எழுத்தர் ஜெயகுரு (45) வெளிச்சந்தையில் மது பாட்டில்களை விற்றது உறுதியானதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் (சஸ்பண்ட்) செய்யப்பட்டுள்ளார்.


