News April 10, 2024
உச்சத்தில் பங்குச்சந்தை

பங்குச்சந்தை புதிய உச்சத்தை நோக்கி வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 251 புள்ளிகள் அதிகரித்து 74,931 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 68 புள்ளிகள் அதிகரித்து 22,713 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. Indian Oil Corp, TVS உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
Similar News
News January 19, 2026
ஜன நாயகன் வழக்கு.. புதிய பரபரப்பு தகவல்

ஜன நாயகன் தணிக்கை சான்று தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நாளை சென்னை HC-ல் விசாரணைக்கு வருகிறது. காலை 11:30 மணிக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடக்கும் என்றும், நாளையே தீர்ப்பு அளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தடை நீக்கப்பட்டால் ஜன நாயகன் விரைவில் ரிலீசாகும். சென்சார் போர்டின் கோரிக்கை ஏற்கப்பட்டால் படம் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பப்படும்.
News January 19, 2026
நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ₹9,000 கோடி கேட்கும் டிரம்ப்

காசாவின் அமைதி வாரியத்தில் நிரந்தர உறுப்பினர் பதவி விரும்பும் நாடுகள் 1 பில்லியன் அமெரிக்க டாலர் (₹9,000 கோடி) செலுத்த வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. இந்தியாவின் <<18893549>>PM மோடி <<>>உட்பட உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு பணம் செலுத்தவும், இந்த நிதி காசாவை மீண்டும் கட்டியெழுப்ப பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
News January 19, 2026
பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்குறீங்களா.. ALERT!

குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு தேவையான நீர் இருக்கும் என்பதால் அவசியம் இல்லை. அதையும் மீறி அதிகமாக தண்ணீர் கொடுத்தால் குழந்தைக்கு சேரவேண்டிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம் என்கின்றனர். 6 மாதங்களுக்கு பிறகு தினமும் 2 – 8 ஸ்பூன் வரை இடைவெளிவிட்டு அவ்வப்போது தண்ணீர் கொடுக்கலாம். SHARE.


