News September 4, 2025

சென்னைக்கு ஆபத்து

image

சென்னையில் 2100-ம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரக்கூடும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் (ம) பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் தலைமையிலான புதிய ஆய்வு கூறுகிறது. ஆய்வில், தூத்துக்குடி கடல் மட்டம் ஆண்டுக்கு -0.17 மி.மீ என குறைந்தும், நாகையில் 0.18 மி.மீ உயர்ந்தும், சென்னையில் ஆண்டுக்கு 0.55 மி.மீ என்ற அளவில் கடல் மட்டம் உயர்ந்துள்ளது. இது கடலோர பகுதிக்கு ஆபத்து என எச்சரிக்கிறது.

Similar News

News September 6, 2025

JUST IN: திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது

image

சென்னை, நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர் பேருந்தில் பயணம் செய்த போது 4 சவரன் நகை திருடு போனதாக போலீசாரிடம் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்ததில், திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாரதி மீது 10 திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News September 6, 2025

சென்னை: EEE, B.Sc, B.Tech போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <>கிளிக்<<>> பண்ணுங்க. (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 6, 2025

கோயம்பேடு மெட்ரோ-க்கு வெடிகுண்டு மிரட்டல்

image

கோயம்பேடில், மெட்ரோ ரயில் நிலைய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று தொலைபேசி வாயிலாக பேசிய மர்மநபர், மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பின், வெடிகுண்டு இல்லை என உறுதியானது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!