News September 4, 2025
சோனியா காந்தி பற்றி மோடி அவதூறாக பேசினார்: தேஜஸ்வி

யாருடைய தாயாரையும் அவதூறாக பேசக்கூடாது என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். PM மோடியின் தாயார் பற்றி காங்., கட்சியினர் அவதூறாக பேசியதற்கு எதிராக இன்று NDA கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, சோனியா காந்தி குறித்து மோடி அவதூறாக பேசியதாகவும், நிதிஷ் குமாரின் DNA பற்றி கேள்வி எழுப்பியதாகவும் கூறி சாடியுள்ளார். இது தற்போது விவாதமாகியுள்ளது.
Similar News
News September 4, 2025
ஜிஎஸ்டி வரி குறைப்பால் என்ன நடக்கும் தெரியுமா?

GST வரி குறைப்பால் அரசுக்கு ₹93 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால், ஆடம்பர பொருட்களை 40%-க்குள் கொண்டு வருவதால் ₹45 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இதன் விளைவாக, ₹48 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும், வரி குறைப்பால் மிச்சமாகும் பணத்தை மக்கள் செலவிட விரும்புவார்கள். இது அப்பணத்தை மீண்டும் பொருளாதாரத்திற்கு கொண்டுவரும். வரிகள் குறைக்கப்பட்டாலும், அரசுக்கு அதிக இழப்பு ஏற்படாது.
News September 4, 2025
சற்றுமுன்: கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தவெக?

NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி நேற்று அறிவித்தார். இதனையடுத்து, EPS மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், OPS உடன் இணைந்து, விஜய்யின் தவெகவுடன் டிடிவி கூட்டணி வைக்கலாம் என்று பேசப்படுகிறது. இந்நிலையில், அவரின் கூட்டணி விலகல் செய்தியை தவெகவினர் பகிர்ந்து வருகின்றனர். இது டிடிவியை தவெக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் சமிக்ஞை போல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News September 4, 2025
மூலிகை: எடை குறைப்புக்கு உதவும் திப்பிலி!

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி,
➤திப்பிலியின் பாக்டீரியா எதிர்ப்பு, வலி நிவாரணி பண்புகள் பல்வலி & வாய் பிரச்னைகளுக்கு நிவாரணியாக உள்ளது.
➤திப்பிலியில் பைபர் உள்ளதால், கொழுப்பைக் குறைக்க உதவும்.
➤திப்பிலி பழங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய் தூக்கமின்மை பிரச்னையை விரட்ட உதவுகிறது.
➤திப்பிலியின் வேரிலிருந்து கிடைக்கும் சாறு, சிறுநீரக பிரச்னைக்கு சிறந்த மருந்தாகும். SHARE IT.