News September 4, 2025
தி.மலை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக (செப்டம்பர்.03) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
Similar News
News September 5, 2025
தி.மலை: 108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான நேர்காணல் நாளை (செப்டம்பர் 6) நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணிக்கு 24 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஷேர் பண்ணுங்க.
News September 5, 2025
தி.மலை: கிரிவலம் செல்ல உகுந்த நேரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை சுற்றி ஆவணி மாதம் கிரிவலம் செல்ல 07/09/2025 அன்று அதிகாலை 1:49 மணி முதல் தொடங்கி திங்கட்கிழமை அதிகாலை 12 :32 வரை கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெயில் அதிகமாக இருப்பதால் மாலை நேரத்தில் கிரிவலத்தை தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் எடுத்து வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News September 5, 2025
தி.மலை: தேர்வு இல்லை; உள்ளூரில் அரசு வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். <