News April 10, 2024
புதுவையில் தங்க நகைகள் பறிமுதல்

புதுவை கோரிமேடு எல்லைப் பகுதியில் நேற்று மாலை தன்வந்திரி காவல் நிலைய போலீஸாா் உதவியுடன் தோ்தல் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சென்னையில் பிரபல நகை தயாரிப்பு மினி வேன் வந்தது. அதைச் சோதனையிட்டபோது சரியான ஆவணங்கள் இல்லாததால் 50.56 லட்சம் மதிப்புள்ள 1.141 கிலோ தங்கநகைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, மாவட்ட உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 12, 2026
உதயஞ்சாலை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

புதுவை ஒதியஞ்சாலை உதவிஆய்வாளர் ஆனந்தகுமார்
மற்றும் போலீசார் ரோந்து
பணியில் இருந்தனர்,
அப்போது மறைமலையடிகள்
சாலை, மற்றும் கண்டாக்டர் தோட்டம் சந்திப்பில் ஒரு வாலிபர் கத்தியை காட்டி பொதுமக்களை
மிரட்டிக் கொண்டிருந்தார்.
போலீசார் அவரை
பிடித்து விசாரித்ததில்
முகேஷ் (23) என்பது
தெரியவந்தது. இதனையடுத்து
போலீசார் அவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்
News February 12, 2026
புதுவை: இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதவை சேதராப்பட்டு – குரும்பாபேட் மின் பாதையில் இன்று (பிப்.12) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே சேதராப்பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, சேதராப்பட்டு கிராமம், முத்தமிழ் நகர் ஒரு பகுதி, EVR தெரு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் இன்று (பிப்.12) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 12, 2026
புதுச்சேரி: பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழப்பு

நெல்லித்தோப்பு பகுதிக்கு உட்பட்ட சக்தி நகரைச் சேர்ந்தவர் சித்ரா (68). இவர் கந்துவட்டியால் மன உளைச்சலுக்கு ஆளாகி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கடனளித்தவர்கள், சித்ரா வீட்டில் வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


