News April 10, 2024
BREAKING: இடியுடன் மழை பெய்யும் மக்களே

கடந்த 2 வாரமாக வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனால், பிற்பகல் நேரத்தில் வெளியே வரமுடியாததால் மழை பெய்யாதா என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு, மக்களின் மனதை குளிர வைத்துள்ளது. இதனால், வெப்பம் ஓரளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 31, 2026
AC & Induction stove-ஐ ஒரே நேரத்தில் ON செய்கிறீர்களா?

AC & இன்டக்ஷன் ஸ்டவ்வை ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், ஓவர் லோட் ஆகி மின்சார விபத்துகள் ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மின்சுமை 5-6 KW வரை அதிகரிக்கும். பாதுகாப்பு அமைப்பு(MCB) இல்லாத வீடுகளில், வயர்கள் வெப்பமடைந்து ஷார்ட் சர்க்யூட்டால் தீ விபத்து ஏற்படக்கூடும். மேலும், மின்கட்டணமும் அதிகரிக்கும். எனவே, இரண்டையும் peak hours-ல் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். SHARE.
News March 31, 2026
தொகுதி மாறியது ஏன்? செந்தில் பாலாஜி

கரூரில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு மாறியது ஏன் என்று செந்தில் பாலாஜி வெளிப்படையாக பேசியிருக்கிறார். 2021-ல் கோவையிலுள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாய்ப்பை இழந்ததால், இத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என தலைமை சொன்னதால், கோவை தெற்கிற்கு மாறியதாக தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ரிசல்ட் அன்று தொகுதி மாறியதற்கான காரணம் தெரியவரும் எனவும் சூசகமாக சவால் விடுத்துள்ளார்.
News March 31, 2026
தல இல்லாமல் தடுமாறும் CSK!

மற்ற அணிகள் ஈசியாக 200 ரன்களை விளாசும் நிலையில், 100 ரன்களையாவது அடிக்குமா என்ற பரிதாபமான சூழலுக்கு CSK தள்ளப்பட்டு விட்டது. தோனி இல்லாமல் CSK தடுமாறுகிறது என ரசிகர்கள் கூறுவதில் கிட்டத்தட்ட உண்மை உள்ளது. ஆம், தோனி இல்லாமல் இதுவரை IPL-ல் CSK, 6 மேட்ச்சில் விளையாடியுள்ளது. அதில், ஒன்றில் மட்டுமே (DC-க்கு எதிராக, 2010) வெற்றி பெற்றுள்ளது. CSK அணி வெற்றி பாதைக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்?


