News September 3, 2025
BREAKING-தருமபுரி: ஆசிரியர் பணியிடை நீக்கம்

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இருக்கிறது. இந்த பல்லயில் படிக்கும் மாணவர்களை, தலைமையாசிரியர் கலைவாணி கை, கால் அமுக்க வைத்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தலைமையாசிரியை கலைவாணியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, அரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த முடிவு பெற்றோர்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது.
Similar News
News September 7, 2025
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தை பற்றி தெரியுமா?

தர்மபுரி, தீர்த்தமலையில் அமைந்துள்ளது தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம். தீர்த்தங்களால் சூழப்பட்ட தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இங்குள்ள தீர்த்தத்தில் மூலிகைகள் கலந்து இருப்பதால், நீராடுபவர்கள் உடற்பிணி, உளப்பிணி யாவும் தீர்ந்து, புத்துணர்வும் புதுவாழ்வும் பெறுகின்றனர். மேலும் இக்கோயிலில் கடன் தொல்லை தீர வேண்டுவதுடன், குழந்தை வரம் வேண்டியும் வழிபடுகின்றனர். ஷேர் பண்ணுங்க!
News September 7, 2025
தர்மபுரியில் 2 லட்சம் பேருக்கு உரிமை தொகை

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் படி மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 2,84,091 நபர்கள் பயனடைந்துள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
News September 7, 2025
து.முதல்வரை சந்தித்த தருமபுரி நிர்வாகிகள்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை திமுக மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுந்தர் சந்தித்து புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் திமுக மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.