News September 3, 2025
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

செப்.5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மிலாடி நபியையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், இந்த வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை சேர்த்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இம்மாதத்தில் காலாண்டு தேர்வுகள் வருவதால் மாணவர்கள் பரீட்சைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். சொந்த ஊர் செல்ல நினைப்பவர்களுக்காக அரசு ஸ்பெஷல் பஸ்களையும் இயக்கி வருகிறது. SHARE IT.
Similar News
News September 5, 2025
ஏன் ஓணம் கொண்டாடுகிறோம் தெரியுமா?

மஹாபலி என்ற அசுரராஜா, நீதியாலும் அன்பாலும் மக்களை ஆட்சி செய்தார். அவரது புகழால் பொறாமைப்பட்ட தேவர்கள், விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு வாமனராக விஸ்வரூபம் எடுத்து, மஹாபலியிடம் 3 அடியளவு நிலம் கேட்டார். முதல் அடியில் பூமி, 2-ம் அடியில் விண்ணையும், 3-ம் அடிக்கு தன்னையே ஒப்படைத்து தலையை மஹாபலி கொடுத்து, பாதாளத்திற்கு சென்றார். அவர் பாதாளத்தில் இருந்து பூமிக்கு வரும் நாளை ஓணமாக கொண்டாடுகின்றனர். SHARE IT.
News September 5, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪கட்சியில் இருந்து <<17618597>>விலகியவர்களை <<>>மீண்டும் இணைக்க வேண்டும்: EPS-க்கு செங்கோட்டையன் கெடு!
✪அறிவியல் <<17617037>>மாற்றத்துக்கு <<>>அடிக்கோடிட்டவர் பெரியார்: CM
✪தங்கம் <<17617924>>விலை <<>>சவரனுக்கு ₹560 உயர்வு
✪ஐரோப்பா மூலம் சீனாவுக்கு செக் வைக்கும் டிரம்ப்
✪மகளிர் <<17616660>>உலகக் <<>>கோப்பை டிக்கெட் ₹100 மட்டுமே! ✪எனது <<17616643>>வாழ்க்கை<<>> சலிப்பானது: அனுஷ்கா
News September 5, 2025
BREAKING: மீண்டும் ஒன்றிணையும் அதிமுக?

அதிமுக மீண்டும் ஒன்றிணைவதற்கான சமிக்ஞையை <<17618597>>செங்கோட்டையன்<<>> கொடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். தனக்கு வந்த 2 வாய்ப்புகளை தியாகம் செய்தவன் என அழுத்தம் திருத்தமாக, 2017-ல் CM பதவி அவரை தேடி வந்ததை மறைமுகமாக கூறியுள்ளார். மூத்த நிர்வாகிகள் சிலர் தன்பக்கம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விரைவில் OPS, சசிகலா, TTV ஆகியோர் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாம்.