News September 3, 2025
பாக்.,-ஐ பந்தாடிய S-400.. இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்

வான் பாதுகாப்பு அமைப்பான S-400-ஐ அடுத்த 2 ஆண்டுகளில் ரஷ்யா வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ல் 5 S-400 அமைப்புகளை ₹39,000 கோடி மதிப்பில் வாங்க இந்தியா ரஷ்யாவிடம் ஒப்பந்தம் செய்தது. அதில் மூன்றை ஏற்கனவே ரஷ்யா வழங்கிய நிலையில், 2026, 2027-ல் மீதமுள்ள இரண்டையும் வழங்க உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தான் ஏவுகணைகளை S-400 இடைமறித்து தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 7, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. நேரில் அஞ்சலி

நாட்டிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர் சக்திவேலின் மறைவுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். J&K எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த சக்திவேலின் உடல் சொந்த ஊரான திருத்தணிக்கு கொண்டு வரப்பட்டு <<18491316>>ராணுவ மரியாதையுடன் அடக்கம்<<>> செய்யப்பட்டது. அரக்கோணம் MP ஜெகத்ரட்சகன் சக்திவேலின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். சக்திவேலின் நண்பர்கள் அவரது குடும்பத்தினருக்கு இன்று நேரில் ஆறுதல் கூறினர்.
News December 7, 2025
School Fees-க்கு ₹1 லட்சம் தருகிறது அரசு!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள், 9-12ம் வகுப்பு வரை படிக்க ஆண்டுதோறும் ₹1,25,000 வரை வழங்குகிறது PM YASASVI Scholarship திட்டம். இதற்கு, மாணவர்கள் OBC, EBC, DNT பிரிவுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ₹2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற <
News December 7, 2025
WORLD CHAMPION – காசிமேடு கீர்த்தனா!

காசிமேடு கீர்த்தனா- கேரம் விளையாட்டில் தவிர்க்க முடியாத பெயர். மாலத்தீவில் நடந்த உலக கேரம் சாம்பியன்ஷிப் தொடரில் கீர்த்தனா(21) ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று, உலக சாம்பியன் ஆகியுள்ளார். தந்தையை சிறுவயதிலேயே இழந்த நிலையில், கீர்த்தனாவின் 2 தம்பிகளின் வருமானத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வருகிறது. வறுமை வாட்டினாலும், விடாமுயற்சியால் வென்ற கீர்த்தனாவிற்கு பாராட்டுகள்!


