News September 3, 2025
நீலகிரியில் ரூ.1க்கு வாங்கலாம்!

நீலகிரி மாவட்டத்தில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 4ஜி சேவையை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரூ.1க்கு பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இத்திட்டம் செப்.15ம் வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் மனோஜ் தெரிவித்துள்ளார். இதை மற்றவருக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News September 4, 2025
ஊட்டி அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை!

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில எச்ஐவி கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஊட்டியில் உள்ள அணிக்கொரை அரசு பள்ளி மாணவர்களான மாணவி ரக்ஷிதா, மாணவர் பாலாஜி ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
News September 4, 2025
நீலகிரி: உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News September 4, 2025
நீலகிரியில் இலவசமாக செடி, விதை பெற அழைப்பு!

நீலகிரி மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க<