News September 3, 2025

அரியலூர்: 10th போதும் ரூ.59,900 சம்பளத்தில் வேலை!

image

அரியலூர் மக்களே, தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News September 5, 2025

அரியலூர்: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

image

அரியலூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News September 5, 2025

அரியலூர் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

இன்று (செப்டம்பர் 5) வெள்ளிக்கிழமை மிலாடி நபி தினத்தையொட்டி, தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் இன்று ஒரு நாள் முழுமையாக மூடப்படும் என்றும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News September 5, 2025

அரியலூர்: தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் உள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியான எந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியம் வழங்கப்படவுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!