News September 3, 2025

மாவட்ட காவல்துறை வைத்த பேனர்160=165 என்னவா இருக்கும்

image

கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையின் சார்பில் மிக நீள பிளக்ஸ் வைக்கப்பட்டு அதில் 160 மற்றும் 165 என்ற எண்கள் மட்டும் அச்சிடப்பட்டு, அதில் Stay Tune for Update on 06.09.2025 வாசகம் மட்டும் இடம்பெற்றிருந்தது. இது எது சம்மந்தமாக இருக்கும் என பொதுமக்களிடையே மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது என்னவென்றால் ஹெல்மெட் அணியாமல் சென்று இறந்தவர்களின் எண்ணிக்கை என்று காவலர்கள் கூறினர்.

Similar News

News November 14, 2025

கரூர் அருகே விபத்து இளைஞர் பலி!

image

புகழூர் அருகே சின்ன வாங்கலம்பாளையம், கச்சைகட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (29). இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பால்வார்பட்டி பிரிவு ரோடு அருகே, தனது டூவீலரில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, தான்தோன்றிமலையை சேர்ந்த திருமாவளவன் (45), என்பவர் ஓட்டி வந்த லாரி, டூவீலர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். தென்னிலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 14, 2025

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில்,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட் தேர்வு) நவ.15, 16 நடக்கிறது. இதில், 5 மையங்களில் நாளையும், 19 தேர்வு மையங்களில் நாளை மறுநாளும் நடக்கிறது. மையங்களில் முறையே, 1,254 மற்றும், 5,228 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை, 9:30 மணிக்குள் மையத்தில் இருக்க வேண்டும் அதற்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி

image

கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நாளை (14.11.25) காலை 10 மணி அளவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்கும் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!