News September 3, 2025
சென்னையில் இனி உங்களுக்கு அலைச்சலே இல்லை!

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான அரசு சேவைகளை பெற நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டாம். பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், கடை வாடகை செலுத்துவது, செல்லப்பிராணிகளை பதிவு செய்வது, சொத்து வரி செலுத்துவது, தொழில் வரி செலுத்துவது, சமூக நல கூடங்களை புக் செய்வது, இறப்பு சான்றிதழ், மாநகராட்சி சார்ந்து புகார் செய்வது உள்பட 34 சேவைகளை <
Similar News
News December 8, 2025
BREAKING: சென்னையில் இளைஞருக்கு தலையில் வெட்டு

சென்னை, வியாசர்பாடி நேரு நகர் பகுதியில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அவரது நண்பர்கள் கத்தியால் வெட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலை, தோள்பட்டையில் காயங்களுடன் அஜய் என்ற இளைஞர் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாய்த்தகராறு கைகலப்பாக மாறி கத்தி குத்து வரை சென்றது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 8, 2025
சென்னை: தலைக்கேறிய போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

சென்னை தாம்பரம்- திருவான்மியூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பயணிகளை தொடர்ந்து தரக்குறைவாக பேசியுள்ளார். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அரசு பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் பேருந்தை இயங்கி வருவது தெரியவரவே பயணிகளை அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மதுபோதையில் பேருந்தை ஒட்டியதோடு பயணியாளிடம் வசைபாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News December 8, 2025
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை

2020ல் கீழ்பாக்கம் பகுதியில் 3 பள்ளி மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடத்திய 53 வயது நபர் மீது, சிறுமியின் தாயார் புகாரின் பேரில் W-4 கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தது. விசாரணை முடிந்து, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்தார்.


