News September 3, 2025

BREAKING நெல்லை: 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

image

நெல்லை மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி, ராதாபுரம் தலைமை ஆசிரியை ரத்தினாள் சுமதி, மகாராஜா நகர் ஜெயேந்திர பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயந்திரன், வீரள பெருஞ்செல்வி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா புஷ்பராணி, ஆசிரியை பாக்கியலட்சுமி உள்ளிட்ட 9 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Similar News

News September 5, 2025

நெல்லை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

நெல்லை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0462-2500592 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 5, 2025

பாஜகவில் நைனார் நாகேந்திரன் மகனுக்கு பொறுப்பு

image

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய நிர்வாகிகள் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நயினார் பாலாஜிக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் ஆவார். இதுபோல் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் மாரியப்பனுக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

நெல்லை: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வேலை

image

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடிந்தவர்கள் செப்.27 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<> கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். BE படித்த உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!