News September 3, 2025

விவசாயிகளுக்கு விரோதமாக திமுக அரசு உள்ளது – இபிஎஸ்

image

”தமிழகத்தில் ஹைட்ரோஉள்ளிட்ட கார்பன், மீத்தேன் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு விரோதமாக தி.மு.க.,அரசு செயல்படுகிறது,” என மதுரை மாவட்டம், மேலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், டங்ஸ்டன் திட்டத்திற்கு அதிமுக மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே திட்டம் கைவிடப்பட்டது எனவும் தெரிவித்தார்.

Similar News

News September 5, 2025

மதுரை மேயர் கணவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு

image

மதுரை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி விதிப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் இதுவரை 17 பேர் கைதாகினர். இவர்களில் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் உட்பட 7 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே நிபந்தனை ஜாமின் அனுமதித்தது. இந்நிலையில் கைதான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், பில் கலெக்டர் ரவிச்சந்திரனின் ஜாமின் மனு மீதான விசாரணையை செப்.10ம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.

News September 4, 2025

மதுரை: டிகிரி முடித்தால் உள்ளூரில் வேலை ரெடி..!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மதுரையில் மார்க்கெட்டிங் மேனேஜர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <>இந்த லிங்க் மூலம்<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.15,000 முதல் 25,0000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2025 ஆகும். மதுரையிலேயே வேலை செய்ய அரிய வாய்ப்பு. SHARE IT…

News September 4, 2025

மதுரை: மின் வாரியத்தில் 1,794 காலியிடங்கள்! உடனே APPLY

image

மதுரை மக்களே, தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிபணியிடங்களை TNPSC அறிவித்துள்ளது. 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட ஐடிஐ முடித்தவர்கள் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.18,800-ரூ.59,900. கடைசி தேதி: 02-10-2025 ஆகும். மின்சாரத்துறையில் அதிக காலியிடங்கள். இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. எல்லோரும் தெரிஞ்சிக்க இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!