News September 3, 2025

அரசின் அக்கறையின்மையால் பறிபோன உயிர்: EPS சாடல்

image

சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததற்கு அரசின் அக்கறையின்மை தான் காரணம் என EPS சாடியுள்ளார். இப்படி பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன் என கேட்ட அவர், தீபா உயிரிழப்புக்கு திமுக அரசு முழு பொறுப்பேற்று நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளோடு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News March 4, 2026

ஈரான் தாக்கு பிடித்தால் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கல்

image

உச்ச தலைவர் கமேனியின் மரணத்திற்கு பிறகு ஈரான் சரணடையாமல் அதன் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போர் 4 வாரங்களில் முடிவடையும் என்று டிரம்ப் கூறினாலும், அது நீளும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். ஈரான் மீதான தாக்குதல்கள் இன்னும் 10 நாள்களுக்குத் தொடர்ந்தால், அமெரிக்காவின் முக்கியமான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் இருப்பு குறைந்து போகக்கூடும் என்று பென்டகன் எச்சரித்துள்ளது.

News March 4, 2026

விஜய் என்னை எட்டி உதைத்தார்.. பரபரப்பு பதிவு

image

விஜய்யின் Ex உதவியாளர் டி.ஆர்.ரமேஷ் அளித்த பேட்டி தற்போது வைரலாகிறது. அதில், விஜய் ஒருநாள் கோபமாக போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சாப்பாடு பரிமாறினேன். உணவில் ஒரு முடி இருந்ததற்காக என்னை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டார். இது எனக்கு மிகுந்த வருத்தமளித்தது. ஆனால், மறுநாள் கூட இதற்காக என்னிடம் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்த பதிவை தற்போது பலரும் பகிர்கின்றனர்.

News March 4, 2026

திமுக + காங்கிரஸ்.. கூட்டணியில் மாற்றம்

image

திமுக – காங்., கூட்டணி இழுபறி நிலையிலேயே நீடிக்கிறது. ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை என முக்கிய தலைகள் நேற்று அறிவாலயம் நோக்கி அடுத்தடுத்து விரைந்ததும் கூட்டணி முடிவாகும் என கூறப்பட்டது. முன்னதாக, 25 தொகுதிகள் கொடுக்கவே திமுக தயாராக இருந்தது. இந்நிலையில், திடீர் மாற்றமாக 28 + 1 தொகுதி அளிக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாம்.

error: Content is protected !!