News September 3, 2025

15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என CM நம்பிக்கை

image

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஐரோப்பிய பயணம் துணை நிற்கும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும், ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். 26 நிறுவனங்களுடன் ₹15,320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் X தள பதிவில் பகிர்ந்துள்ளார்.

Similar News

News March 12, 2026

BREAKING: தமிழகத்தில் அடுத்த பிரச்னை வெடித்தது

image

தூத்துக்குடியில் நேற்று இரவு இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற <<19356260>>+2 மாணவி வன்கொடுமை<<>> செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு அடங்குவதற்குள் சென்னையில் கல்லூரி மாணவி காரில் கடத்தி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்ட் தொடர்பாக வந்திருந்த மாணவியை அடையாறு பகுதியில் காரில் கடத்தி ஒரு கும்பல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த விவகாரம் TN-ல் அடுத்த பிரச்னையாக வெடித்துள்ளது.

News March 12, 2026

பூமியை நோக்கி வரும் 600 கிலோ ஆபத்து!

image

நாசா 2012-ல் விண்ணில் ஏவிய 600 கிலோ எடை கொண்ட Van Allen Probe A விண்கலம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே பூமிக்கு திரும்புகிறது. விண்கலத்தின் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும் என்றும் எஞ்சியிருக்கும் பெரும்பாலான துண்டுகள் தண்ணீரில் விழும் என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், அது பூமியில் எங்கு விழும் என்று தெரியாததால், இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

News March 12, 2026

349 பணியிடங்கள், ₹57,000 சம்பளம்.. இன்றே கடைசி!

image

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <>upsc.gov.in<<>> தளத்தில் வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். சம்பளமாக ₹57,000 – ₹1.77 லட்சம் வரை கிடைக்கும். SHARE.

error: Content is protected !!