News September 3, 2025
பிளாஸ்டிக்கிற்கு குட்பை சொன்னால் பரிசு நிச்சயம்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை மட்டும் பயன்படுத்தி வரும் உணவகங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெரிய சிறிய என 2 உணவகங்களுக்கு பரிசுத்தொகையுடன் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு உரிமம் பெற்ற உணவக உரிமையாளர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை<
News December 8, 2025
பெருந்துறை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண் கைது

பெருந்துறை அருகே 42 வயது பெண், தன் மகனுடன் படிக்கும் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டார்.
நண்பனாக வீட்டிற்கு வந்த மாணவனுடன் பழகி அப்பெண் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவன் வீட்டிற்குச் செல்லாமல் அப்பெண்ணின் வீட்டிலேயே தங்கியதால், மாணவனின் தாய் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் குற்றம் உறுதியானதை அடுத்து, போலீசார் பெண்ணை கைது செய்தனர்.
News December 8, 2025
பெருந்துறை அருகே பெண் கொடூரக் கொலை!

பெருந்துறை அருகே தீர்த்தாம் பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் (60) இவர் மனைவி விஜயா(52) இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். சொத்து விற்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று காஞ்சி கோவில் ரோடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த விஜயாவை செங்கோட்டையன் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டார். காயமடைந்த விஜயா துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.


