News September 3, 2025

நம்மாழ்வார் விருது பெற அழைப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது இந்த விருதினை பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். அக்ரிஸ்நெட் வலைதளத்தில், செப்15ம் தேதிக்குள் பதிவுக் கட்டணம் 100 ரூபாய் செலுத்தி,விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான தகவலுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்

Similar News

News December 9, 2025

செங்கல்பட்டு: கத்தி முனையில் அரங்கேறிய பயங்கர சம்பவம்!

image

பொத்தேரியை சேர்ந்த தஷ்வந்த் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பொத்தேரி கல்லூரி சாலையில் நடந்து செல்லும் போது திடிரென்று மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து தஷ்வந்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல் போன் மற்றும் கையில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 9, 2025

செங்கல்பட்டு: விளையாட்டே வினையாய் அமைந்த சோகம்

image

மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷின் மகள் சாலினி ஸ்ரீ (6), தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டின் முன் சாலினி விளையாடிக்கொண்டிருந்தபோது, கால் தடுமாறி விழுந்ததில் நெற்றியில் காயமடைந்து மயங்கியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சாலினி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பெற்றோர்சாலினி உடலை பார்த்து கதறி அழுதனர்.

News December 9, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (டிசம்பர்.8) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!