News September 3, 2025
சீருடை பணிகளுக்கான கட்டணமில்லா பயிற்சி

போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தகவல். வரும் செப்டம்பர் 5 முதல் வேலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீருடை பணிகளுக்கான தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற உதவுவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
Similar News
News December 9, 2025
வேலூர்: கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா..?

வேலூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள<
News December 9, 2025
வேலூர் கலெக்டர் அறிவித்தார்!

வேலூரில் 8 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி காட்பாடி தாலுகா துணை தாசில்தார் துளசிராமன், காட்பாடி தேர்தல் துணை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த குமார், கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு தலைமை உதவியாளராகவும், வருவாய் கோட்ட துணை தாசில்தார் வாசுகி, கலெக்டர் அலுவலக ‘ஈ’ பிரிவு கண்காணிப்பாளராகவும், இதேபோல் 8 பேர் பணியிட மாற்றப்பட்டுள்ளனர்.
News December 9, 2025
வேலூரில் மலிவு விலையில் வாகனம்!

வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனம் முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டு எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகிற 22ஆம் தேதி காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. மேலும் வாகனத்தினை பார்வையிட விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


