News September 3, 2025
கடலூர்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News September 10, 2025
கடலூர்: விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டியில் அகில இந்திய விவசாயி தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டத் தலைவர் லோகநாதன் தலைமையில் 100 நாள் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News September 10, 2025
கடலூர்: B.E படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

கடலூர் பட்டதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 10, 2025
கடலூர்: ஒரே நாளில் 2,241 மூட்டை வேளாண் விளைபொருட்கள் வரத்து

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு, விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து தினந்தோறும் வேளாண் விளை பொருட்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். அந்த வகையில் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2.241 மூட்டை வேளாண் விளை பொருட்கள் விற்பனைக்கு வந்தன.