News September 3, 2025
நீலகிரி: விளையாட்டா மட்டும் இதை செய்யாதீங்க..!

100ஐ அழைக்கும் போது, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச்செல்லும். கடுமையான குற்றச்சம்பவங்கள், கலவரம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை, தீவிர விபத்துகள், சந்தேகத்திற்குரிய நபர்கள், குடும்ப வன்முறை, சுயபாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு அழைக்கலாம். 24 மணி நேரமும் காவல்துறை உங்களுக்கு உதவும். ஆனால் விளையாட்டாக 100ஐ டயல் செய்தால், கட்டாயம் கடும் தண்டனையும் உண்டு. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்க.
Similar News
News September 9, 2025
நீலகிரி: இரவு ரோந்து அலுவலர்களின் பணி விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (09.09.2025) இரவு நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல் உட்கோட்டங்களில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விபரம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். உங்கள் பாதுகாப்பு.! எங்கள் சேவை..! என்று நீலகிரி மாவட்ட காவல்துறையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
துணை முதல்வரை சந்தித்த திமுக நிர்வாகிகள்!

சென்னையில் உள்ள துணை முதல்வர் இல்லத்தில் நீலகிரி மாவட்ட திமுக அமைப்பாளர்கள் சந்தித்தனர் . நீலகிரி மாவட்டம் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார் தலைமையில் குன்னூர் நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.ஹெச் சையத் மஞ்சூர் குன்னூர் நகர முப்பது வார்டுகளில் உள்ள 30 கிளைகளின் இளைஞர் அணி மற்றும் துணை அமைப்பாளர்கள் படிவ பட்டியலை தமிழக துணை முதலமைச்சரிடம் வழங்கினர்.
News September 9, 2025
நீலகிரியில் யானை மிதித்துக் கொன்றதால் மறியல் !

கூடலூர் ஓவேலி பார்வுட் பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் சம்சுதீன் என்ற தொழிலாளி பலியானதால், அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் அடிக்கடி யானை மனித மோதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதுவரை வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இந்நிலையில் போலீசார் இவர்களை குண்டுக் கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.