News September 3, 2025

நாகை: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், நாகை மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். (SHARE பண்ணுங்க)

Similar News

News September 5, 2025

நாகை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தில் உள்ள ஆச்சாள்புரம், மேமாத்தூர், மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் நாளை (செப்.06) மின் தடை செய்யப்படவுள்ளன. அதன்படி ஆச்சாள்புரம், மேமாத்தூர், மணக்குடி, துளசேந்திரபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News September 5, 2025

நாகையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

image

நாகை மாவட் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற செப்.10ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 4, 2025

நாகை மக்களே.. இனி அலைச்சல் இல்லை!

image

நாகை மக்களே..சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். இனி <>https://tnurbanepay.tn.gov.in <<>>இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் சேவைகளையும் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!