News April 10, 2024
சீனப் பகுதிகளுக்கு இந்தியா புதிய பெயர் வைத்தால்…

சீனப் பகுதிகளுக்கு இந்தியா புதிய பெயர்களை வைத்தால், அது இந்தியாவுக்கு சொந்தமாகி விடுமா என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அருணாச்சல் மாநிலத்தை உரிமை கொண்டாடும் சீனா, அண்மையில் அந்த மாநிலத்திலுள்ள பகுதிகளுக்கு புதிய பெயர் வைத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், சீனா பெயர் வைத்தால், அது சீனப் பகுதிகளாகி விடாது, எப்போதும் இந்திய பகுதிகள்தான் என்றார்.
Similar News
News April 29, 2025
பள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி!

மதுரை K.K.நகர் பகுதியில் உள்ள தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்த 3 வயது சிறுமி ஆருத்ரா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுமார் 30 நிமிடங்கள் தண்ணீர் தொட்டியில் தத்தளித்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், ICU-வில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளி இயங்கியது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
News April 29, 2025
கூட்டணி கணக்கு.. அமித்ஷா – நயினார் சந்திப்பின் பின்னணி!

டெல்லி சென்றுள்ள TN பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், தேர்தலை திறம்பட எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், TN-ல் பாஜகவை வளர்ப்பது தொடர்பாக நயினாருக்கு பல்வேறு ஆலோசனைகளை அமித்ஷா வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
News April 29, 2025
கோலியின் மூளையில் என்ன இருக்கு தெரியுமா?

எத்தனையோ பேர் இருக்க கோலி மட்டும் எப்படி ரன் மிஷின் ஆனார்? கோலி மட்டுமல்ல, எல்லா ஜீனியஸ்களின் மூளை செயல்படும் விதத்திலும் ஒரு பேட்டர்ன் உண்டாம். அதை System 1, System 2 என உளவியலாளர்கள் பிரிக்கிறார்கள். சாதாரண யோசனைகளுக்கு System 1, மூளையைக் கசக்குகிற திட்டங்களுக்கு System 2. இந்த System 2-வை பயிற்சியின் மூலம் நம் System 1 ஆகவே மாற்றி சாதிக்கலாமாம். இப்போ தெரிகிறதா கோலி ஏன் கிங்குன்னு..